அன்பிற்கு இனிய நண்பர்களே கடந்த 76 வருடங்களாக நான் நீந்தி திளைத்த தமிழ் பெரும் கடலில் கிடைத்த அனுபவங்களை இந்த இணையதளத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். "பலருடைய முன்னேற்றங்களைப் பார்க்கும்போது, நான் ஒன்றுமே செய்யவில்லை என்பதுபோல தோன்றுகிறது. ஆனால், நான் எழுதிய ஒவ்வொரு எழுத்தும் என் கையால் நானே எழுதியது என்ற பெருமிதம் ஏற்படுகிறது. எனது படைப்புகள் அனைத்தும் காலத்தை வென்று நிற்ககூடியவை. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கலைஞர்கள் விரும்பிப் போற்றக் கூடியவை. இது உறுதி!"
அன்புடன்
தாமரை
இவரது புதிய கண்டு பிடிப்புகளில் தமிழகம் பெருமைப்படககூடியது, சுமார் 1500 ஆண்டுகட்கும் முன்னரே ஒரு கோழிக்கு எடுத்த நினைவுக்கல்லை இவர் வெளிப்படுத்தியது ஆகும். அதில் உள்ள சொற்றொடர் பண்டைய தமிழ் இலக்கணத்தில் இடம் பெற்றுள்ளது என்று ஆராய்ந்து வெளிப்படுத்தியது மேலும் சிறப்பாகும்….
பல்கலைப் புலவர் தாமரைக்கண்ணன் அவர்களின் ‘வரலாற்றுக் கருவூலம்’ என்ற சுசீந்திரம் பற்றிய நூலே, ஒரு கருவூலமாகத் திகழ்கின்றது. மொழித்திறனும் அறிவியல் கண்ணோட்டமும்,……. மேலும் படிக்க